வடபழனியில் இன்று அதிகாலை சென்னை மெட்ரோ பணிகள் நடைபெற்று இருந்த போது அந்த வழியாக வந்த சென்னை மாநகர பேருந்தின் மீது கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது.
இன்று அதிகாலை 5 மணியளவில் சென்னை, வடபழனி பணிமனையில் இருந்து 159ஏ என்ற சென்னை மாநகர் பேருந்து புறப்பட்டு சென்றது. பணிமனையில் இருந்து புறப்பட்டதால் பயணிகள் யாரும் பேருந்தில் இல்லை.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. வடபழனி அருகேயும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது அந்த வழியாக மேற்கண்ட அரசு பேருந்து வரும்போது, மெட்ரோ பணியில் ஈடுபட்டு இருந்த கிரேன் இடித்து மாநகர பேருந்து பலத்த சேதமடைந்துவிட்டது.
நல்லவேளையாக பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பேருந்து ஓட்டுநர் பழனி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சென்னை வடபழனி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…