jegan [Imagesource : Fileimage]
திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கொம்பன் ஜெகன். இவர் மீது 26 மாவட்டங்களில், 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஜெகனை பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் ரவுடி ஜெகனை தேடி வந்தனர். இதனையடுத்து, ரவுடி ஜெகன் சனமங்கலம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், ஜெகனை பிடிப்பதற்காக போலீசார் சென்றுள்ளனர்.
திருச்சியில் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை..!
போலீசார் சனமங்கலம் பகுதியை அடைந்த போது, போலீசாரை பார்த்தவுடன் அவர் தப்ப முயன்றுள்ளார். அவரை விரட்டி பிடிக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் வினோத்தை ஜெகன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ரவுடி ஜெகன் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரவுடி ஜெகன் மீது 2 இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, என்கவுண்டர் நடத்தப்பட்ட இடத்தில், டி.ஐ.ஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…