கோவை கார் வெடிவிபத்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , டிஜிபி சைலேந்திர பாபு, தலைமை செயலர் இறையன்பு, உளவுத்துறை முக்கிய அதிகாரி, உள்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஜமேஷ் முபினுக்கு உதவி செய்த 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அதிகாரிகள் தனி தனி குழுக்களாக பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம், உளவுத்துறை அதிகாரி ஆகியோர் உடன் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை கார் வெடிவிபத்து தொடர்பாகவும், தமிழகத்தில் தற்போதைய சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…