பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கே.கே. நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்,ஆன்லைன் வகுப்புகளின்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, முறையற்ற செய்திகளை அனுப்புதல்,அரை நிர்வாணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு வருதல் மற்றும் மாணவர்களிடம் அநாகரீகமான கருத்துகளை தெரிவித்தல் போன்ற புகார்களின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து,அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. அதன்பின்னர்,சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்றம் ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க மறுத்தது.இதனையடுத்து,ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்,சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கில்,அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் மற்றும் மற்றும் தற்போதைய மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் அளித்த புகாரின் அடிப்படையில்,வாக்குமூலம் பெறப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…