அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! நடந்தது என்ன.?

Published by
மணிகண்டன்

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல்நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் நடந்துகொண்டதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” எனும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, கடந்த 8ஆம் தேதி பொம்மிடி அருகே பள்ளிப்படி எனும் ஊரில் உள்ள லூர்து அன்னை தேவாலயத்தின் உள்ளே நுழைய முற்பட்டார்.

ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர், அண்ணாமலை தேவாலயத்திற்குள் உள்ளே நுழைய கூடாது என தடுத்து நிறுத்தினர். பாஜக ஆளும் மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர் என்றும் தேவாலயங்கள் இடிக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டி அதனால் பாஜகவினர் உள்ளே வரக்கூடாது என வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் பாஜக தலைவர் அண்ணாமலை அங்குள்ள இளைஞர்களிடம் சமாதானம் செய்ய முயற்சித்தார். இருந்தும் அவர்கள் உள்ளே விட மறுத்ததால் எங்களை உள்ளே விடவில்லை என்றால் இங்கே தர்ணாவில் ஈடுபடுவோம் என வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு சற்று பதற்றமான சூழல் நிலவியது.

இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த கார்த்தி எனும் இளைஞர்  பொம்மிடி காவல் நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் அளித்து இருந்தார்.  மக்களிடையே நிலவும் பொதுஅமைதியை சிதைக்கும் வகையில்  பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பட்டதாக கூறி அவர் மீது 3 பிரிவுகளில் பொம்மிடி காவல் நிலைத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. சட்டப்பிரிவு 153 (ஏ), 504, 505(2) என்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

4 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

4 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

5 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

6 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

8 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

8 hours ago