யூ-டியுப் மூலம் பிரசவம் பார்த்த காதலன்.. இறந்த குழந்தை.. கவலைக்கிடத்தில் மாணவி!

Published by
Surya

சென்னை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் நர்மதா. இவர் கம்மார்பாளயத்தை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 27 வயதாகும் சவுந்தர், தனியார் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் டெலிவர் செய்யும் வேலை செய்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதலிப்பது வீட்டிற்கு தெரியாது. ஆனால் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நர்மதா கர்பமடைந்தார். 

8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், நேற்று மாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. பிரசவ வழியாக இருக்குமோ என அஞ்சிய அவர், தனது காதலான சவுந்தருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து, யாருக்கும் தெரியாமல் சவுந்தர் நர்மதாவை கம்மார்பாளையம் அருகே உள்ள காப்புக்காட்டிற்கு அழைத்து சென்று தானே பிரசவம் பார்ப்பதாக கூறினார்.

அதன்பின், இருவரும் காப்புக்காட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் நர்மதாவை படுக்கவைத்து யூ-டியுபில் பிரசவ விடீயோக்களை பார்த்து அதுப்படியே பிரசவம் பார்த்து வந்தார். அப்பொழுது கையால் குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்தார்.

அப்பொழுது குழந்தையின் கை துண்டாக வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையின் கையை காட்டிலேயே வீசினார். குழந்தையை எப்படியாவது வெளியே எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தன்னிடம் இருந்த பிளேடால் தோப்பில் கொடியை அறுத்தார். அப்பொழுது நர்மதாவின் குடலில் அந்த பிளேடு தெரியாமல் அறுத்தது. அப்பொழுது ரத்தம் அதிகமாக வெளியேறியதை பார்த்து அவள் கதறினாள். 

நிலைமை பெரிதானால், சுந்தரின் மோட்டார் சைக்கிளில் நர்மதாவை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், நர்மதா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறினார். இதனையடுத்து, நர்மதாவை எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அறுவைசிகிச்சை மூலம் இறந்த நிலையில் அந்த ஆண் குழந்தை எடுக்கப்பட்டு, நர்மதாவுக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக குமிடிப்பூண்டி காவலர்கள், சுந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago