3ஆம் வகுப்பு படித்து வரும் ஜெய்ஸ்ரீவர்மன் எனும் சிறுவன், தான் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த 4,586 ரூபாய் பணத்தை தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நிதியுதவியாக கொடுத்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்து. பலவேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் போன்றோர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவனின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் ஓட்டுநராக மணிவண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெய்ஸ்ரீவர்மன் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவனிடம் தூய்மை பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதை கூறியுள்ளார்.
இதனை கேட்டறிந்த அச்சிறுவன் தான் சைக்கிள் வாங்க சேர்த்து வரித்திருந்த 4,586 ரூபாய் பணத்தை தூய்மைப்பணியாளர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என தீர்மானித்து தனது தந்தையிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளான். இதனை தொடர்ந்து, அவரது தந்தை மணிவண்ணன், சிறுவன் ஜெய்ஸ்ரீவர்மனை பேரூராட்சி அலுவலகத்திற்கு கூட்டி சென்று சேர்த்து வைத்திருந்த 4,586 ரூபாய் நிதியை செயல் அலுவலர் குகனிடம் வழங்கியுள்ளார். அவர் அப்பகுதி தூய்மை பணியாளர்களுக்கு சத்தான ஊட்டச்சத்து உணவு வழங்க இந்த நிதி பயன்படும் என உறுதியளித்தார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…