திருச்சி மாவட்டம், திம்மராய சமுத்திரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மணிகண்டன் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை, காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் அண்ணன்மார், மணிகண்டனை எச்சரித்துள்ளனர். அதனை கண்டுகொள்ளாத மணிகண்டன், தொடர்ந்து சிறுமியுடன் தனிமையில் பேசுவதை வழக்கமாக்கி வந்துள்ளார்.
இதனையடுத்து, புதன்கிழமை மாலை சிறுமியையும், மணிகண்டனையும் அங்குள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலின் அருகே, சிறுமியின் அண்ணன்மார் பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இவர்கள், அவர்களது நண்பர்களுடன் இணைந்து இரும்புக்கம்பி, அரிவாள் ஆகியவற்றை பயன்படுத்தி தாக்க முற்பட்டுள்ளனர்.
இதனை கண்டு பயந்த மணிகண்டன், அடகு கடை ஒன்றினுள் தஞ்சம் புகுந்தார். மணிகண்டனை வளைத்து பிடித்த, சிறுமியின் அண்ணன்மார் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மணிகண்டனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தப்பி ஓடிய அந்த நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…