வேலூர் மாவட்டத்தில் உள்ள லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிவேதினி (14) இவர் சென்னாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை நிவேதினி வகுப்பறையில் இருக்கும் போது மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து விட்டு கே.வி குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மாணவி மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் இறப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில் , தங்கள் மகளுக்கு வலிப்பு வந்ததாக கூறி பள்ளியிலிருந்து தகவல் கிடைத்தது. பின்னர் நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். மேல்சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும்போது நிவேதினி இறந்துவிட்டார்.மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே எங்கள் மகள் இறப்புக்கான காரணம் தெரியும்..? என கூறினார்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…