கரூரில் கொரோனாவில் இருந்து மீண்ட 95 வயது மூதாட்டி.!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது நிரம்பிய மூதாட்டி உட்பட ஐந்து நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் கரூரை அடுத்த காந்தி கிராமத்தில் அமைந்துள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 அடுக்குகளுடன் கூடிய பிரமாண்ட கட்டிடத்தில், 300 படுக்கை வசதிகளுடன் 7வது தளத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களையும் சேர்ந்த நோயாளிகளும் கரூர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கரூர் மண்டலமாக கருதப்படும் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் இன்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 95 வயது நிரம்பிய மூதாட்டியும் பூரண குணமடைந்து அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025