50 கிலோ பளு தூக்கும் கருவியை தூக்கிய 93 வயது ராக்கம்மாள் பாட்டி

Default Image

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டையில் 93 வயதான ராக்கம்மாள் என்ற பாட்டி 50 கிலோ பளு தூக்கும் கருவியை மிகவும் சுலமபாக தூக்கி அனைவரையும் ஆச்சரிய படவைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டையில் வசித்து வருப்பவர் ராக்கம்மாள் 93 வயதான இந்த பாட்டி உடல் உறுதியுடன் ஜிம்னாஸ்டிக் செய்து வருகிறார். மேலும் சமீபத்தில் அவர் 50 கிலோ பளு தூக்கும் கருவியை மிகவும் சுலமபாக தூக்கி அனைவரையும் ஆச்சரிய படவைத்துள்ளார். இது குறித்து இந்த ராக்கம்மாள் பாட்டியி கூறியது, நான் சிறிய வயதிலே இருந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டதால் எனக்கு இப்பொழுது எடையை தூக்கினாலும் எளிமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் நான் இதற்காக உடற்பயிற்சி எல்லாம் செய்வது கிடையாது. எப்பொழுதாவது என்னுடைய இருக்கும் எனது பேரக்குழந்தைகள் உடற்பயிற்சி செய்யும் போது அந்த எடையை தூக்கி பார்க்க ஆசைப்படுவேன். மேலும் என்னால் தூக்க முடியுமா என்பதை அவர்கள் பார்த்து பயப்படுவார்கள் என்று கூறினார்.

மேலும் நீங்கள் உங்களுடைய வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு தூதுவளை, பிரண்டை முடக்கத்தான் கீரை, போன்ற சத்தான உணவுகளை தொடர்ந்து கொடுத்து சாப்பிட்ட பழக்கப்படுத்தி வந்தால் நல்ல உறுதியான உடலையும் ஆரோக்கியத்தையும் பெறலாம் என்று பாட்டி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்