தமிழகத்தில் 90 கோடியாக குறைந்த மது விற்பனை!

Default Image

மது விற்பனையில் முன்னிடத்தில் இருந்த தமிழகத்தில் தற்பொழுது விற்பனை 90 கோடியாக குறைந்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது வரை 49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே கடந்த 50 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனுடன் மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், மது விற்பனை இல்லாமல்  செய்ய இயலாது என கூறி தமிழகத்தில் மது கடைகள் திறக்கப்பட்டது. மது இன்றி பல நாட்களாக காய்ந்த மதுபிரியர்கள் பொருளை அடகு வைத்தேனும் மதுவை வாங்கி குடித்தனர். 

திறக்கப்பட்ட சனிக்கிழமை முதல் நாளே 163 கோடிக்கும், அடுத்த நாள் ஞாயிற்று கிழமை 133.1 கோடிக்கும், திங்கள் கிழமை 109.3 கோடிக்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று 91.5 கோடிக்கு தான் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. முன்னுக்கிருந்த மதுரையை பின்னுக்கு தள்ளி திருச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்