நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம் – ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் விமர்சனம்

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.

சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் பிறந்தநாநாளையொட்டி இன்று அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். அந்தவகையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.

அதாவது, நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம். அதுபோன்று ஓபிஎஸ் -க்கு கட்சி இல்லை, கட்சியில் அவர் உறுப்பினரும் இல்லை. அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஓபிஎஸ் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமிக்கிறார். கட்சியில் அடிப்படை உறுப்பினர் இல்லாத பன்னீர்செல்வம், எப்படி நிர்வாகிகளை நியமிக்க முடியும்?, இதனால் நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம் என்பது தான் ஓபிஎஸ் -க்கு பொருந்தும் என விமர்சித்தார்.

அதிமுக அலுவலகம் சூறையாடம் தொடர்பாக காவல்துறை யார் வீட்டுக்கு சென்று இருக்க வேண்டும். அனைத்தும் பன்னீர்செல்வம் வீட்டில் தான் இருந்தது என்று ஜே.சி.டி.பிரபாகர் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்கிறார். ஆனால், டம்மி பீஸாக உள்ள கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி வீட்டில் ஆவணங்களை கைப்பற்றுகின்றனர். ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க. கைகோர்த்து உள்ளனர் என குற்றசாட்டினார்.

இதனிடையே பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தலைவர்களின் சிலைக்கு உடனடியாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திமுக செய்து இருக்க வேண்டும். ஆனால் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் இவர்கள், சமூக நீதி என்று சொல்லும் இவர்களின் ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது. திமுக மாவட்ட அமைப்புகளுக்கான மனு தாக்கலில் 700 பேர் கூட வரவில்லை. அதில் எத்தனை பேர் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் என்ற பட்டியலை சமூக நீதிப் பேசுபவர்கள் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago