7 ஐபிஎஸ் உட்பட 9 அதிகாரிகள் திடீர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Default Image

தமிழகத்தில் உள்ள 7 ஐபிஎஸ் உட்பட 9 அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை கிரைம் எஸ்.பியாக மாற்றம். மேலும், சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக ஓம்.பிரகாஷ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பியாக சிபி சக்ரவர்த்தி நியமனம். தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பியாக ஜெயலட்சுமி, கமாண்டோ படை எஸ்.பியாக ஜெயச்சந்திரன், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் கண்ணம்மாள் ஆகியோரை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்