காசிமேட்டில் கடந்த 55 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 9 மீனவர்கள் மீட்பு.
சென்னை காசிமேடு பகுதியில் 9 மீனவர்கள் கடந்த 55 நாட்களுக்கு முன்பு காணாமல் போகினர். இவர்களை தேடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவர்கள் 9 பேரும் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீன் வள துறை அமைச்சர் ஜெயக்குமார், மீட்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருடன் தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், தொலைந்த காசிமேடு மீனவர்களை தொடர்ச்சியாக தேடி வந்தோம். அவர்களது குடும்பத்தினரும் என் மீதும் அரசு மீதும் நம்பிக்கை இருப்பதாக சொல்லி வந்தார்கள். நாங்கள் பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்த் மற்றும் ஆகிய இடங்களுக்கு மீனவர்கள் காற்றின் வேகத்தால் வந்திருக்க கூடும் என தகவல் அளித்திருந்தோம்.
இறுதியாக பர்மா மியான்மரில் உள்ள அத்தியாசி யாங்கூர் ஆகிய இடத்தில 9 பெரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் படகுடன் நலமாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதுடன் புகைப்படங்களும் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்துக்கு அவர்களை கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், மீனவர்களின் குடும்பத்தினரும் தற்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…