பிள்ளைகள் 9 பேற்றும் ஒருவேளைக்கு சோற்றுக்கு??..அடி உதைப்பா..?கண்ணீர் விட்டு கதறும் தாய்…!

Default Image

சென்னை கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பேபியம்மாள் வயது75 கணவர் பார்த்தசாரதி 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.பேபியம்மாளுக்கு 5 மகன்கள் மற்றும் 4மகள்கள் உள்ளனர்.

கணவர்காலமான நிலையில் பேபியம்மாள் தனக்கு சொந்தமாக கொசப்பேட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள வீட்டில் தன் மகன்களுடன் வசிந்த வருகிறார்.மகங்கள் தங்களது மனைவிகளோடு சேர்ந்து பேபியம்மாளுக்கு உணவு கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி அடித்து துன்பப்படுத்தியாக கூறப்படுகிறது.

பிள்ளைகளின் கொடுமை தாங்காத மூதாட்டி 2 வருத்திற்கு முன்னரே ஓட்டேரி போலீஸில் புகார் அளித்து உள்ளார்ஆனால் மூதாட்டி கொடுத்த புகார் தொடர்பாக இதுவரை எவ்வித நடவடைக்கையும் போலீசார் வில்லை.

இந்நிலையில் முதியவர் உதவித்தொகை மூலமாக வயிற்றை கழுவி வந்துள்ளார்.அடுத்து கொடுமைப்படுத்தும் மகன்கள் மீது போலீசார் நடவடிக்கை
எடுக்காததால் வழியின்றி காவல் ஆணையரிடமே முறையிட ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார்.ஆனால் அலுவலகத்திற்குள் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.அதன் பின்னர் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் வேப்பேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். 9பிள்ளைகள் இருந்தும் ஒரு வேளை உணவிற்கு சிரமப்படுவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்