9 மாத கர்ப்பிணி மனைவியை தனியே விட்டு விட்டு….கஜா புயல் மீட்பு பணியில் ஈடுபட்ட இளைஞர்…!!

Published by
Dinasuvadu desk
தஞ்சையில் 9- மாத கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி வரும் தஞ்சை இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக கரையை கடந்த ‘கஜா’ புயல் தஞ்சை மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், பாப்பாநாடு உள்ளிட்ட பகுதிகளை ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு உள்ளது.
புயல் கரையை கடந்த வேளையில் பலத்த காற்று வீசியதால் விவசாய பூமியான பட்டுக்கோட்டையில் தென்னை, மா, வாழை, வேப்ப மரங்கள், தேக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இளைஞர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். இதில், கரம்பையம் கிராமத்தை சேர்ந்த ரகு என்ற இளைஞர் தனது கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி புரிய களத்தில் இறங்கியுள்ளார்.
அவர் கூறும்போது, “எனது மனைவி 9 மாத கர்ப்பிணி. நான் விட்டுக்கு சென்று 2 நாட்கள் ஆகின்றன. இளைஞர்கள் நாங்கள் எங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து வருகிறோம்.
அத்துடன் தீயணைப்புத்துறையினருக்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். இங்கே புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் நிறைய குழந்தைகள் உள்ளனர். ஒரு வயது, ஒன்றரை வயது குழந்தைகள் பால் மற்றும் உணவின்றி தவித்து வருகின்றனர். நாங்கள் இளைஞர்கள் இணைந்து இன்று அவர்களுக்கு 1,000 லிட்டர் பால் வழங்கியுள்ளோம். அந்த குழந்தைகளுக்கு அத்யாவசிய தேவையான உணவு, பால் மற்றும் தண்ணீரை மட்டும் அரசு வழங்கினால் ரொம்ப உதவியாக இருக்கும் என கூறினார்.9- மாத கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி வரும் தஞ்சை இளைஞரின் செயலை அனைவரும் பாராட்டி விட்டு செல்கின்றனர்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

7 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

7 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

7 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

7 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

8 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

8 hours ago