இதுவரை 8,795 பேர் கைது.! 5,501 வாகனங்கள் பறிமுதல்-தமிழக காவல்துறை .!

Default Image

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில்  தற்போது  இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 873 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதையெடுத்து அனைத்து மாநிலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும் பல மாநிலங்களில்  பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி  வழக்கம் போல வெளியில் சுற்றி வருகின்றனர்.இதனால் போலீசார் அவர்களை மீது தடியடி நடத்தியும் ,கொரோனா குறித்து விழிப்புணர்வு அறிவுரை கூறியும் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் இதுவரை  8,795 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுத்ததாகவும்செய்யப்பட்டுள்ளதாகவும் , 7,119 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
TN CM MK Stalin - BJP State president Annamalai
gold price
Annamalai - BJP-Tasmac
TN Assembly Speaker Appavu
BJP State President Annamalai
Thirumavalavan - VCK