உயிரிழந்த தூத்துக்குடி போலீஸ் சுப்ரமணியம் குடும்பத்துக்கு 86.50 லட்சம் தென்மண்டல போலீஸ் சார்பில் நிதி உதவி!

Published by
Rebekal

ரவுடியை பிடிக்கச் சென்ற போது வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட தூத்துக்குடி போலீஸ் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு தென்மண்டல காவல்துறையினர் சார்பில் 86 6.50 லட்சம் நிதி உதவி.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மணக்கரை மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியான துரைமுத்து என்பவரை கடந்த 18ம் தேதி தனிப்படை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் மீது ரவுடி துரைமுத்து வீசினார். இந்த சம்பவத்தில் போலீசார் சுப்பிரமணியன் அவர்கள் உயிரிழந்துள்ளார், மேலும் அந்த வெடிகுண்டு வெடித்த இடத்தில் ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தார்.
உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியன் அவர்கள் குடும்பத்துக்கு 50 லட்சம் நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில்தற்பொழுது தென்மண்டல போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் பணியாற்றக்கூடிய போலீசாரின் பங்களிப்பில் தற்போது போலீஸ் சுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்திற்கு 86.50 லட்சம் நிதி திரட்டப்பட்டு தென்மண்டல போலீஸ் ஐஜி முருகன் அவர்களால் நேற்று ஏரல் அருகே உள்ள பண்டாரவிளை சுப்பிரமணியன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி வழங்கப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago