“சென்னையில் 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது”- ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்

சென்னையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் அனைவரும் வீட்டிலிருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.
இந்தநிலையில் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தடுக்க, சென்னை நேப்பியர் பாலம் முதல் சாந்தோம் வரை மெரினா கடற்கரை காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு நடத்தினார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் ரவுடிகளுக்கு அனுமதி இல்லையெனவும், கஞ்சா கடத்தலையும், விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சாவை செய்துள்ளதாகவும், கஞ்சா, குட்கா, ரவுடிசத்தை குறைக்க கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025