former Minister C.Vijayabaskar. File | Photo Credit: PTI
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து 800 ஆவணங்கள் தாக்கல் என தகவல்.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து 800 சொத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட 800 சொத்து ஆவணங்களும், 10,000 பக்கங்களை கொண்டவை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விஜய பாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் மீது நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிமுகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…