8 மாத குழந்தை கடத்தல்.! போலீஸ் வலைவீச்சு.!

Default Image

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள நடைமேடையில் தனது 8 மாத குழந்தையுடன் தூங்கிய பெண், எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால், சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். இதையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் விக்ரவாண்டியை பூர்விகமாக கொண்ட சினேகா என்பவர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் இவர், கணவரை பிரிந்து தனது 8 மாத குழந்தையுடன் சென்னை வந்து ஊசிமணி, மாலைகள், பலூன்கள் விற்று வந்த அவர், கடற்கரை சாலையோர நடைபாதையில் நரிக்குறவர் மக்களோடு வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்