தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை…இலங்கை நீதிமன்றம் உத்தரவு….!!

Default Image

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்கள் , கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது , அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.பின்னார் இலங்கை கடற்படையினர்  மீனவர்கள் 8 பேரையும் கைது செய்து , இலங்கை குத்தலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த மீனவரின் குடும்பத்தினர் 8 மீனவர்களையும் மீட்டு தர கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி,தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னையில் இருக்கும் இலங்களை தூதரகம் முன்பு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.மக்களின் கோரிக்கையை ஏற்று, கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்