வீடு கட்ட அஸ்திவாரத்திற்காக தோண்டிய பள்ளத்தில் 8 அடி பெருமாள் சிலை..!

Published by
Sharmi

அரியலூர் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 8 அடி பெருமாள் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருமானூர் பகுதியில் இருக்கும் கரையான்குறிச்சி கிராமத்தில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ள சரவணன் அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்ட முற்பட்டுள்ளார். அதன் காரணத்தினால் கடந்த 2 நாட்களாக அஸ்திவாரம் போடுவதற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் நேற்று 4 அடி தோண்டிய பொழுது, அங்கு சிலை போன்று ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் அந்த கற்சிலையை மேலெடுக்க கிராம மக்கள் உதவியோடு முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், இரவு நேரம் வந்ததால் இம்முடிவை நிறுத்தி வைத்தனர். காலை வருவாய்த்துறை தலைமையில் ஜேசிபி மூலமாக மீண்டும் கற்சிலையை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் 8 அடி உயரமுள்ள சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இதை சுத்தம் செய்து பார்த்த பிறகு தான் இது பெருமாள் சிலை என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் அங்கு இந்த சிலைக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபட்டுள்ளனர். இதனை அரியலூர் கோட்டாச்சியர் ஏழுமலை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இது திருச்சி அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தொல்பொருள் ஆராய்ச்சி மூலமாக இந்த கற்சிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago