விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிறைவு.. மாலை 5 மணி நிலவரப்படி 77.3% வாக்குகள் பதிவு.!

Published by
கெளதம்

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இப்பொழுது, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.84 லட்சம் மாலை 5 மணி நிலவரப்படி பேர் வாக்களித்துள்ளனர்.

276 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, ஆண் வாக்காளர்கள் 89,045 பேர், பெண் வாக்காளர்கள் 95,207 பேர் என மொத்தம் 1,84,255 பேர் வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்கு பதிவின் முழுமையான நிலவரம் இன்று இரவு அல்லது நாளை காலை வெளியாகும். ஜூலை 13-ஆம் தேதி சனிக்கிழமை அன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.

அதன்படி,  பாஜக தலைமையிலான NDA கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுகிறார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. இதனால் விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

Published by
கெளதம்

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

7 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

9 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

9 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

10 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

11 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

12 hours ago