தமிழகத்தில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 55 பேருக்கு கொரோனா உறுதியானது.
தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,520 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,596 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டுமே 178 பேர் குணமடைந்து, மொத்தம் 635 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து இன்று ஒரே நாளில் 6,060 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 53,045 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில், 1,596 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 940 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டு கண்காணிப்பில் 22,254 பேர் இருக்கின்றனர். அரசு கண்காணிப்பில் 145 பேர் உள்ளனர். மேலும் 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து இதுவரை 87,159 பேர் வீடு திருப்பியுள்ளார்கள். இன்று அதிகபட்சமாக சென்னையில் 55 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் அங்கு 358 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…