சென்னையை சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அப்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது அவரது வயிற்றில் பெரிடோனியல் ஹைடடிட் எனப்படும் நீர்க்கட்டிகள் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அவரது வயிற்றில் ஒன்று , இரண்டு நீர்க்கட்டிகள் இல்லாமல் மொத்தம் 759 நீர் கட்டிகள் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வயிற்றில் இருந்த அனைத்து நீர்க்கட்டிகளையும் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கினர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் , வயிற்றில் நீர்க்கட்டிகள் வளரும் போது எந்தவித அறிகுறியும் தெரியாது. நீர்க்கட்டிகள் வளர்ந்த பின்னே கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதிலும் வயிற்றுக்குள்ளே நீர்க்கட்டிகள் உடைந்துவிட்டால் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீர்க்கட்டிகள் வராமல் இருப்பதற்கு சுத்தமான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். நாய் , ஆடுகள் உள்ளிட்ட பிராணிகளை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக கைகளை நன்கு சுத்தம் செய்த பின் உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…