கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 955,136 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,578 ஆகவும் உள்ளது. இருப்பினும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 203,011 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்,தற்போது இந்தியாவில் வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிப்பும், பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து 144 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 234 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று தமிழக திரும்பிய 1103 பேரில் 264 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களில் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது என தெரிவித்தார். இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு 4,070 பேர் வீடு திருப்பியுள்ளனர் என்றும் 86,342 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…