#73rdRepublicday:8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்;ரூ.1 லட்சம் காசோலை – வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

Default Image

சென்னை:குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இன்று வழங்கப்படவுள்ளது.

நாட்டின் 73 வது குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இன்று சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் வழங்கப்படவுள்ளது.அதன்படி,

  • உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கி சென்ற டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு விருது.
  • திருவொற்றியூர் கட்டட விபத்தின்போது,அப்பகுதி மக்களை காப்பாற்றிய திமுகவின் தனியரசுக்கு விருது.
  • விழுப்புரம்,திருவெண்ணெய்நல்லூரில் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்புத்துறை வீரர் ராஜீவ்காந்திக்கு விருது.
  • கோவை வனக்கால்நடை உதவி மருத்துவர் அசோகன் என்பவர் விருது பெறுகிறார்.
  • மதுரை அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் என்பவருக்கு விருது.
  • திருச்சி மணப்பாறை அருகே நீரில் மூழ்கிய சிறுமியை காபடரிய தேதுலுக்கம்ப்பட்டியைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு சிறுவன் லோகித்திற்கு 2022 ஆம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
  • திருப்பூரில்,நீரில் மூழ்கிய 5 சிறுமிகளை காப்பாற்றிய சொக்கநாதன் மற்றும் சுதா ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா விருது வழங்கப்படுகிறது.

மேலும்,இவர்களுக்கு வீர தீரச் செயலுக்கான விருதுடன் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்