தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வந்தாலும், தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் புதிய மாறுபாடு அடைந்து ஓமைக்ரான் வகை கொரோனாவாக பரவி வருகிறது. இந்த ஓமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. ஆனால், தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 737 பேர் ஒரே நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,31,235 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26,86,683 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,539 ஆகவும் உள்ளது. தற்போது தமிழகத்தில் 8,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…