இலங்கையில் சிக்கி தவித்த 713 இந்தியர்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடி வருகை!

Published by
லீனா

இலங்கையில் சிக்கி தவித்த 713 இந்தியர்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியா முழுவதும் இந்த வைரசை அழிப்பதற்கு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்தனர். 

இந்நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஜலஸ்வா என்ற கப்பல் மூலம் இலங்கையில், சிக்கி தவித்த 713 இந்தியர்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 699 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள். 

இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக, துறைமுக வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இலங்கையில் வடக்கு மாகாணம். கிழக்கு மாகாணங்களில் சிக்கி தவித்தவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் என பலதரப்பப்பட்டவர்கள் உள்ளனர். 

இந்நிலையில், இவர்கள் வரவேற்பதற்காக, தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட காவல்துறை காணப்பணிப்பாளர் ஆகியோர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும், இவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக 30 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது. 

Published by
லீனா

Recent Posts

வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…

55 minutes ago

டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…

1 hour ago

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

1 hour ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

2 hours ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

3 hours ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

3 hours ago