வருடந்தோறும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அங்கங்கே நடைபெறும். அதுவும் பொங்கல் பண்டிகை வந்தாலே காளை மாடுகள் சீறி பாயும், ஜல்லிக்கட்டுக்கு பல தடைகள் வந்தாலும், தடையை உடைத்தெறிந்து போட்டிகள் சிறப்பாக மதுரை மன்னியில் நடக்கும். அதை பார்க்க பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் சென்று போட்டியை பார்த்து வருவார்கள்.
இதனிடையே வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதி நடைபெறுவதை அடுத்து, அதற்கான ஆயத்த பணிகளை கிராம கமிட்டியினர் மேற்கொண்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்றுத்திடலை சுத்தபடுத்தி, காளைகள் வெளியேறும் வாடிவாசலுக்கும், பார்வையாளர்கள் அமரும் மாடத்திற்கும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் பாலமேடு ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 600 வீரர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் விழா கமிட்டிக்கு அனுமதி வழங்கியுள்ளது. சிறந்த வீரருக்கு நாட்டுமாடும், சிறந்த காளைக்கு மாருதி காரும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…