புரேவி புயலுக்கு பலியான 7 பேர் .! முதல்வர் பழனிச்சாமி இரங்கல்.!

Published by
Ragi

புரேவி புயல் மற்றும் மழை காரணமாக பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புரேவி புயல் வலுவிழந்த பின்னரும் தமிழகத்தின் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், மன்னார்குடி,நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது .இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மேலும் பரவலாக பெய்த கனமழையால் பல வீடுகள் இடிந்து விழுந்தும் , மரங்கள் முறிந்தும் காணப்படுகிறது.மேலும் புயல் மழையால் பலர் உயிரிழந்தும் உள்ளனர் .
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 7 பேர் புரேவி புயல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், புரேவி புயலால் ஏற்பட்ட கனமழையால் 1,064 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ,44,716 ஏக்கல் நெல் ,வாழைகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புயல்,மழை காரணமாக உயிரிழந்த குடும்பத்தினருக்கு தனது இரங்கலை முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார் .அவர் பகிர்ந்த பதிவில் கூறியதாவது,புரேவி புயல்,கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் . உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் புரெவி புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.மேலும் 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

10 hours ago

ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…

11 hours ago

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

12 hours ago

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…

14 hours ago

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

14 hours ago

“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…

15 hours ago