பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை! அறிக்கை வெளியிட்ட இரா.முத்தரசன்!

Published by
லீனா

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இரா.முத்தரசன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட 7 பேரின் விடுதலை குறித்து பல தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இரா.முத்தரசன் அவர்கள், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து  வருகின்றனர்.

இவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில், நீண்ட காலதாமதம் ஏற்பட்ட நிலையில், இவர்களுக்கு 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை, 2018-ல் 7 போரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், ஆளுநர் இரண்டு ஆண்டு காலமாக முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக மக்கள் வலியுறுத்தியும் ஆளுநர் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில், பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், ஆளுநரின் காலதாமதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, நீதிமன்றத்திற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. எனினும் அதை பயன்படுத்த விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்ததாகவும், 7 பேர் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால், அது வரலாற்றில் மறுக்கப்பட்ட நீதியாகவே பதிவாகும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு நிர்வாக ஆணையின் மூலம் 7 போரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

5 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

5 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

6 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

6 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

7 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

9 hours ago