புதுச்சேரியில் பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை.! 7 பேர் திருச்சியில் சரண்.!

Default Image

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் செந்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 

நேற்று இரவு 9.30 மணியளவில் புதுச்சேரியில் வில்லியனூர் அரசு பள்ளி அருகே, புதுச்சேரி மங்களம் பகுதி பாஜக பொறுப்பாளராக இருந்த செந்தில் குமரன் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொடூரமாககொலை செய்யப்பட்டார்.

தனிப்படை :

இந்த கொலை சம்பவத்தை அடுத்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண் அடைந்துள்ளனர்.

7 பேர் சரண் :

நித்தியானந்தம், சிவசங்கர், ராஜா, வெங்கடேசன், பிரதாப், கார்த்திகேயன், விக்னேஷ் என 7 பேர் சரணடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்கள் புதுச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்களிடம் புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்