சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஜனவரியில் நிறைவுபெறும். குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் பாதிப்பை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை (முழுவதும்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என 4 மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இத்தகைய பாதிப்புகளை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் வெகுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருமழை, வெள்ளம் ஏற்பட்டால் அவை மழைநீர் வடிகால் வழியாக கடலுக்கு சென்றடைய ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இன்று சென்னை மாநகராட்சி அலுவலகமாக ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு என 7 அமைச்சர்களும், தயாநிதி மாறன் உள்ளிட்ட 3 திமுக எம்பிகளும், சென்னை மேயர் பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த பகுதி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து பல்வேறு கேள்விகளையும், மழைநீர் தேங்கும் பகுதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், சென்னை வருவாய் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பேரிடர் மீட்புத்துறை மற்றும் சென்னை மெட்ரோ துறையினரும் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு போல பெருவெள்ளம் ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மழைநீர் வடிகால் பணிகள் என பல்வேறு விவகாரங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…