தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பலி.! 776 பேருக்கு கொரோனா.!

Default Image

தமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 13,191 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து கொரோனாவுக்கு இன்று 7 பேர் பலியாகியுள்ளனர். இதனால், உயிரிழப்பின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 400 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 6282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 விமானங்களில் தமிழகம் வந்த 2,139 பேரில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்