அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் 2வது நாளான இன்று சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது, நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது, தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர், நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுக தான் முழு காரணம். காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் 13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம் என்றும் ஆவேசமாக தெரிவித்தார். இதையடுத்து, தற்போது சட்டப்பேரவையில் மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி. இதில், மருத்துவம், பல் மருத்துவம், ஓமியோபதி, இளங்கலை படிப்புகளில் முன்னுரிமை தர உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…