சென்னை சைதாப்பேட்டை ரேஷன் கடையில் 7.36 லட்சம் கொரோனா நிவாரண நிதி கொள்ளை

Published by
Rebekal

சென்னை சைதாப்பேட்டை காவேரி நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் 7.36 லட்சம் கொரோனா நிவாரண நிதிக் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி கைப்பற்றியது ,இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதலே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்களுக்கு ஊரடங்கு நேரத்தில் பயன்படுவதற்காக முதல்வர் முன்னமே வாக்களித்தபடி தற்பொழுது நிவாரண நிதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை காவேரி நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் கொரோனா நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அந்த ரேஷன் கடை சூப்பர்வைசர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

7.36 லட்சம் ரேஷன் கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நிவாரண நிதியை வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், அவர்களுக்கான நிதியை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்காக கொடுக்கப்பட்டிருந்த கொரோனா நிவாரண நிதி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

7 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

8 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

8 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

9 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

10 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

11 hours ago