7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல்…17 பேருக்கு குண்டர் சட்டம்…!!

Default Image

சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 17 பேருக்கு குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரை கழகம்…
சென்னையில் அயனாவத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் காத்து கேளாத மாணவிக்கு பாலியல் வன்கொடுமை என அவரது தாய் அளித்த புகாரில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிறுமி வசிக்கும் பிளாட்டின் லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை கொலைசெய்து விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.
முதலில் 4 காம கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்த சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் காவலாளிகள், பிளம்பர்கள் என அங்கு வேலை பார்க்கும் நபர்களின் பிடியிலும் சிக்கியுள்ளார். சுமார் 7 மாத காலமாக இந்த கொடுமை நீடித்துள்ளது.
இதையடுத்து, இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய் புகார் செய்துள்ளார். அவர்களைபோக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் குற்றவாளிகளான 17 பேரும் இன்று சென்னை அறிவுரை கழகத்தில் ஆஜராகினர்.ஆஜராகிய 17 பேருக்கும்  குண்டர் சட்டத்தை உறுதிபடுத்தி தீர்ப்பளித்தது அறிவுரை கழகம்.குற்றவாளிகள் 17பேருக்கும் மரணதண்டனை வழங்கியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்