ஃப்ரீ பயர் விளையாட செல்போன் கொடுக்க மறுத்ததால் 6-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…!

Default Image

ஃப்ரீ பயர் விளையாட செல்போன் கொடுக்க மறுத்ததால் 6-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரை சேர்ந்த தம்பதிகள் பழனி கிட்டனம்மாள். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன. மூன்று பெண்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் ஈஸ்வரன், அர்ஜுனன் இருவரும் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஈஸ்வரன் எட்டாம் வகுப்பும், அர்ஜுனன் ஆறாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

இருவரும் அடிக்கடி செல்போனில் ஃப்ரீ பையர் கேம் விளையாடுவது தொடர்பாக சண்டையிட்டு வந்தனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃப்ரீ பயர் கேம் விளையாடுவது தொடர்பாக இருவரும் சண்டையிட்டதில், அர்ஜுனன் கீழே கிடந்த பிராந்தி பாட்டிலை எடுத்து உடைத்து தனக்குத்தானே வயிற்று குத்த முயன்றுள்ளார். அவரது அம்மா அர்ஜுனனை தடுத்து பிடிங்கி எறிந்துள்ளார்.

இந்த நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய அர்ஜுனன் ஃப்ரீ பயர் கேம் விளையாட செல்போன் கேட்டு இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதனையடுத்து  இருவரையும் அவரது அக்கா சமாதனம் செய்த நிலையில்,  கோபமடைந்த அர்ஜுனன் வீட்டின் ஜன்னலில் தூக்குப்போட்டு இறந்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய நிலையில் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அர்ஜுனனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இதனையடுத்து இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04 03 2025
good bad ugly VS idly kadai
PMModi -Animals
IMD - Summer
IndvsAusSfinal
TN CM MK Stalin
steve smith travis head