கொரோனாவுக்கு நிதி வழங்கிய 65 வயது மூதாட்டி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா நிவாரண நிதி வழங்கிய 65 வயது மூதாட்டி.
இந்தியாவில் கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் முதல் சிறுவர்கள் முதல் அனைவருமே நிதி வழங்கி வருகின்றனர். இதனையடுத்து, மதுரை ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் நிவாரண நிதியாக பிராத்தமர் மோடி மற்றும் 27 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு தலா 100 ரூபாய் நிவாரண நிதியாக மணியார்டர் மூலம் அனுப்பியுள்ளார்.