தேவர் குருபூஜை வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி வரும் 21ஆம் தேதிக்குள் அனுமதி வேண்டி விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வருடாவருடம் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா, தேவர் ஜெயந்தி விழாவாக கொண்டாப்படும். அன்றைய தினம் அவர் பிறந்த ஊரான ராமநாதபுர மாவட்டம் கமுதி வட்டத்திற்கு உட்பட்ட பசும்பொன் கிராமத்தில் குருபூஜை விழா நடைபெறும்.
இந்த குருபூஜையில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெற கூடாது என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பின்னர் அதற்கான நெறிமுறைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதில் முதற்கட்டமாக, தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள கமுதி வருபவர்கள் வரும் 21ஆம் தேதிக்குள் மாலை 5.45க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…