10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்! ரத்தம் சொட்ட சொட்ட முதியவரை போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Default Image
  • மதுரையில் ஒரு 10 வயது சிறுமி பாலியல் சீண்டளுக்கு உள்ளானதை மருத்துவர்கள் மூலம் தெரியவந்தது. 
  • அந்த சிறுமி கூறியதன் பெயரில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் போலீசாரால்  கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 

மதுரையில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி , 5ஆம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த சிறுமிக்கு தந்தை தாய் இல்லை. பாட்டி தாத்தாவிடம் வளர்ந்து வருகிறார். இச்சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடைபெற்றதாக சந்தேகப்பட்டு மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டாள்.

அச்சிறுமியை சோதித்த மருத்துவர், பாலியல் சீண்டலுக்கு உள்ளானது உண்மைதான் என கூறினார். அதனை தொடர்ந்து அச்சிறுமியிடம் உறவினர்கள் கேட்டனர். அதற்க்கு அச்சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் முதியவர் தனக்கு தினமும் மிட்டாய் வாங்கிக்கொடுத்து இவ்வாறு செய்ததாக சிறுமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து அந்த 60 வயது முதியவரை உறவினர்கள் அடித்து ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் ஒப்படைத்தனர். மதுரை தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்