தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 60 சிலைகள் பறிமுதல்..!சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி

Default Image

சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில்  60 சிலைகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

தமிழகத்தில் சமீபகாலமாக சிலை கடத்தல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.மேலும் குஜராத்தில் உள்ள சாராபாய் கலிக்கோ ஃபவுண்டேஷன் என்ற அருங்காட்சியத்தில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளை மீட்டு சென்னைக்கு சமீபத்தில்பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 60 சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.இந்த சோதனையை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் செய்து பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்