அமராவதி ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பலி.
திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த 30 பேர் திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை பகுதியில் நடைபெற்ற கடா வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் அவர்கள் திருப்பூர் செல்லும் வழியில், அங்குள்ள அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக ஒருவர் பின் ஒருவராக 8 பேர் சென்று நீரில் மூழ்கிய நிலையில், அருகில் இருந்த மற்றவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சரண் ஜீவா என்ற இரண்டு பேரை உயிருடன் மீட்டனர். பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த அமிர்த கிருஷ்ணன், ஸ்ரீதர், ரஞ்சித், யுவன், மோகன் என்ற நான்கு கல்லூரி மாணவர்கள், ஒரு பள்ளி மாணவர் உட்பட 6 பேரின் உடல்களை மீட்டு தாராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோகன், ரஞ்சித், ஸ்ரீதர், சக்கரவர்த்தி, அமீர், யுவன் ஆகிய 6 பேர் பலி
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…