மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்.
கடந்த 26ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கஞ்சா இருப்பதாகக் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, 9 கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 கைபேசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா குறித்த தகவலை மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் தான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக இம்தியாஸ் கூறியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி வசீம் அக்ரமை வழிமறித்து, மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டியதால், அதே இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்த 6 பேரை அழைத்து வந்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், செல்வகுமார் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…