டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு..15 நாள்களில் 6 பேர் கைது..!

Published by
murugan

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 6 பேர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் என ஏற்கனவே 51 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு கிடப்பில் கிடந்ததாக புகார் எழுந்ததால் 15 நாள்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய 99 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருமே வெளிமாவட்டத்தைச்  சேர்ந்தவர்கள். இதனால், ஒரே தேர்வு மையத்தில் எப்படி 99 பேர் தேர்ச்சி பெறமுடியும் என்ற சந்தேகம் எழுந்தநிலையில், இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இந்தப் புகார்கள் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி தேர்ச்சி பெற்ற 99  பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவர தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago