தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 6.34 டன் ஆக்சிஜன் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக பரவி வரும் நிலையில், இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனையின் அத்தியாவசிய வசதிகள், மருந்துகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்க சில தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது.
இதனையடுத்து பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்பதாக தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அங்கும் ஆக்சிஜன் உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட 6.34 டன் ஆக்சிஜன் தற்பொழுது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…