கிராம சபை கூட்டத்தில் பேருந்து வசதி கோரிய 5-ம் வகுப்பு மாணவி .!

Published by
murugan
  • குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையெடுத்து மதுரை மீனாட்சிபுரம் கிராம சபை கூட்டம்  நடைபெற்றது.
  • 5-ம் வகுப்பு மாணவி சஹரா தங்கள் சகோதரர் , சகோதரிகள் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு  செல்வதால் பேருந்து வசதி செய்து தருமாறு கூறினார்.

இன்று நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார்.

அதேபோல டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற்ற இந்த குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இந்த விழாவில்  குடியரசு துணைத்தலைவர் வெங்கையா  நாயுடு ,பிரதமர் மோடி , பிரேசில் அதிபர் மெசியாஸ் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையெடுத்து மதுரை மீனாட்சிபுரம் கிராம சபை கூட்டம்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 5-ம் வகுப்பு மாணவி சஹரா தங்கள் சகோதரர் , சகோதரிகள் மாயாண்டி பட்டி பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு  சென்று மீண்டும் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படுவதாக கூறினார்.

மேலும் தங்களது சகோதரிகள் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு காட்டுவழியாக ஒத்தையடி பாதையில் வருகையில் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் , இதனால் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தங்கள் பகுதியில் இருந்து மாயாண்டி பட்டி மேல்நிலை பள்ளிக்கு செல்ல அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டுமென அந்த கூட்டத்தில் மாணவி சஹரா கூறினார்.

பள்ளி ஆசிரியரின் தூண்டுதலின் பெயரிலே மாணவி சஹரா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார். இந்த மாணவியின் துணிச்சலான கோரிக்கையை ஏற்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ,அரசு அதிகாரிகள் அனைவரும் மாணவி சஹரா பாராட்டினர்.

பின்னர் மீனாட்சிபுரத்தில் இருந்து மாயாண்டிபட்டி பள்ளிக்கு மாணவர்களின் நலன் கருதி அரசு பேருந்துகள் வசதி செய்து தருவதாக இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Published by
murugan

Recent Posts

சீமான் வீட்டில் நடந்த சம்பவம்..முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!

சீமான் வீட்டில் நடந்த சம்பவம்..முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…

53 minutes ago

டாட்டா குட்பை…CT தொடரில் நடையை கட்டிய இங்கிலாந்து…தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…

2 hours ago

மாஸ்டர் சாதனையை மர்டர் செய்த குட் பேட் அக்லி! அடுத்த சம்பவம் லோடிங் மாமே…

சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…

2 hours ago

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…

3 hours ago

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…

4 hours ago

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

4 hours ago